Posts

Showing posts with the label Bishop

எட்வர்ட் ஜார்ஜென்ட், Edward Sargent

Image
  கிறிஸ்து இரத்தம் சிந்தி சம்பாதித்து தந்த திருச்சபையை பேணிக் காப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் பேராயர் எட்வர்ட் சார்ஜென்ட். அவர் 1835 - ஆம் ஆண்டு நெல்லை பட்டணத்தில் தன்னுடைய ஊழியத்தை ஆரம்பித்தபோது இங்கு 224 திருச்சபைகள் இருந்தது. ஆனால் அவர் மரிக்கும்போது, அதாவது 1889 - ஆம் ஆண்டு அங்கிருந்த திருச்சபைகளின் எண்ணிக்கை 1008 ஆகும். திருச்சபையின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். அதுமட்டுமல்ல, சபைகள் அனைத்தையும் கிறிஸ்துவில் வேரூன்றச் செய்தவர். போதகர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை அதிகம் நேசித்தவர். அவர்களது குறைகளை நீக்கி, மகிழ்ச்சியோடு தேவனுக்காக பணி செய்ய ஊக்குவித்தவர்.  வாட்டர் லூ போரில் ஈடுபட்ட ஒரு போர் வீரனின் மகன் தான் எட்வர்ட் ஜார்ஜென்ட் - அப்பட்டாளம் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட போது சார்ஜென்ட் தன் பெற்றோருடன் வந்தார். போரில் அவரது தகப்பனார் மரித்து விட்டார். தனிமையிலிருந்த தாயார் தன் மகனை சென்னை இராணுவ குரு அருள்திரு. சாயர் அவர்களின் பொறுப்பில் விட்டுவிட்டு தன் தாய்நாட்டிற்குச் சென்றார். 1815 - ஆம் ஆண்டு அக்டோபர் 16 - ஆம் நாள் பாரீஸ் மாநகரத்தில் பிறந்த சார்ஜென்ட், சிறு வயதிலேயே ...

HUGH LATIMER லாட்டிமர் (Tamil & English)

Image
  1555, அக்டோபர் 16 ஆம் நாள்… கள்ளப்போதகன் என்று பட்டம் சூட்டப்பட்டு கம்பங்களில் கட்டப்பட்டு போகிப் பொங்கலன்று தூக்கி எரிக்கப்படும் தேவையற்ற பொருளாக வேத பண்டிதர் லாட்டிமர் நிறுத்தப்பட்டார் .  கிரியையை வலியுறுத்தி கிருபையை இருட்டடிப்புச் செய்ய அவர்கள் , சத்தியம் தவறாத தேவமகன் லாட்டிமர் தங்களோடு ஒத்துபோகாத காரணத்தால் கொலைக்குற்றம் சாட்டினர் . அவருடன் பிஷப் ரிட்லுயும் அதே காரணத்துக்காக முதுகோடு முதுகாக சேர்த்துக் கட்டப்பட்டு கொலைமரத்தில் கொண்டு நிறுத்தப்பட்டார் . இந்த விசுவாசப் படுகொலை  பார்க்க திரள்கூட்டம் கூடி வந்திருந்தது . பார்வையாளர்களுக்குத் தான் அன்றும் இன்றும் பஞ்சமில்லையே . இந்த மரணத்தால் தங்கள் ஆத்துமாவை கொல்ல முடியாது என்று மனத்தெளிவுடன் அந்தக் கொலைக் கம்பங்களையே லாட்டிமர் முத்தமிட்டார் . ரிட்லி வானத்தை அண்ணாந்து பார்த்து பிதாவே உமது கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் , என்று உரக்கச் சொன்னார் . திருச்சபையின் துரோகிகள் என்று இவர்கள் பொய் குற்றம் சாட்டினார்கள .; அக்கம்பங்களுக்கு தீமூட்டும் முன்னர் தங்கள் சடங்குபிசகாமல் இறுதிப் பிரசங்கம் ஒன்றை செய்தன...